திருத்தணி: திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள சந்தான வேணுகோபாலபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மான் வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியது. அந்த வழியாக வந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் ஹேமகுமார் மற்றும் பிரபு ஆகியோர் மானை மீட்டனர். தகவலறிந்த திருத்தணி வனசரகர் அருள், மாணவர் சுந்தரம் ஆகியோர் மானை கால்நடை மருத்துவரிடன் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மான் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டது. இறந்த மானை காட்டுக்குள் புதைத்தனர்.