சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனராக உள்ள முனியநாதன், தொழிலாளர் நலன் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த வள்ளலார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை ஆணையராக உள்ள லில்லி தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை சிறப்பு செயலாளராக உள்ள பூஜா குல்கர்னி, தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குநராகவும், நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநராக இருந்த கணேசன், தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநராகவும், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் இணை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.