×

எச்.ராஜா மீது தொடர் அதிருப்தி காங்கிரசுக்கு மாறும் பாஜ கட்சி நிர்வாகிகள்: சிவகங்கை மாவட்டத்தில் கூடாரம் காலி?

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தோல்வியடைந்தார். இதற்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணம் என புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து எச்.ராஜா மீது புகார் தெரிவித்த முக்கிய நிர்வாகிகளான சந்திரன், பாலமுருகன், பிரபு ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 3 பேர் மற்றும் பாஜ வர்த்தகபிரிவு மாவட்டத் தலைவர் கணேஷ்ராம் உள்பட சிலர், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கணேஷ்ராம் கூறுகையில், ‘‘பாஜவில் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. கட்சி வளர வேண்டும் என்றால், அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஆனால் பாஜவில் அது போன்று இல்லை என்பதால்தான், நான் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். இன்னும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் மாற்றுக்கட்சியில் இணைய உள்ளனர்’’ என்றார்.

Tags : BJP ,Congress ,H Raja ,Sivagangai district , BJP executives switch to Congress: Tent vacant in Sivagangai district?
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...