×

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர் கெபிராஜ் போக்சோவில் கைது

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர் கெபிராஜ் போக்சோ வழக்கில் மீண்டும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் கெபிராஜ் (41). கராத்தே மாஸ்டர், இவர் தன்னிடம் பயிற்சி பெற்ற, கல்லுாரி மாணவியர் உள்ளிட்டோருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரித்த போது சிறுமியருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 30ம் தேதி கெபிராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயிற்சி மற்றும் போட்டிக்கு அழைத்து செல்லும்போது மேலும் பல மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து பல புகார்கள் கெபிராஜ் மீது குவிந்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மீண்டும் கைது செய்தனர்.

Tags : Karate ,Kibraj , Karate master Kibraj arrested for sexually harassing girls
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...