×

போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன கேமராக்களில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன கேமராக்களில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணாநகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர், திருமங்கலம் உள்பட 5 சிக்னல்களில் ஏஎன்பிஆர் எனப்படும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்களை வேகமாக இயக்குவது, ஸ்டாப் லைனை தாண்டி வாகனத்தில் நிற்பது, சிவப்பு சிக்னலை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன பதிவெண்களை அந்த கேமரா படம்பிடித்து உடனே தேசிய தகவல் தொழில்நுட்பத்தின் சர்வருக்கு அனுப்பி தொடர்புடைய வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு 10 நொடிகளில் குறுந்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறிய 10,905 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்திற்குள் முறையான விளக்கம் தராத நிலையில் அபராதம் வசூலிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.



Tags : transport
× RELATED 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை...