×

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியை சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கார், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செலின்குமாரின் வீட்டில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 2 பேர் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்.

இதில் காரும் இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்நிலையி செலின்குமார் வீட்டில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 2 பேர் வந்த நிலையில் ஒருவர் பிபிஇ உடை அணிந்து கார் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்தனர்.



Tags : Kanyakumari , petrol
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...