×

டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப்போல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும் :சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , “கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகள் வழங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை மறைப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு.கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு.

தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.வரும் வாரங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டு விட்டது என்பதற்காக பொதுமக்கள் கவனக்குறைவின்றி செயல்படக் கூடாது. அதேபோல் கொரோனா நமக்கு இல்லை என்றும் எண்ணிவிடக் கூடாது.பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக் கூடாது. மக்கள் வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப்போல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த போது அங்கு யாரும் முகக்கவசம் அணியாதது தெரிய வந்துள்ளது.டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும்” என்றார்.

Tags : Health Secretary ,Radhakrishnan , Department of Health, Secretary, Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்