×

பனியன் நிறுவன உரிமையாளர் கள்ளக் காதலியுடன் தற்கொலை

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் நெருப்பெரிச்சல் பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் தனது மகன் பிரேமுடன்(39) வசித்து வந்தார். பிரேமுக்கு திருமணம் ஆகவில்லை. இவர், அதே பகுதியில் சிறிய அளவிலான பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது பனியன் நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி கார்த்திகைசெல்வன் என்பவரது மனைவி நிரோஷா (30) டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஆண் குழந்தை, 9 வயதில் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளன.

பிரேமுக்கும், நிரோஷாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்களின் கள்ளக்காதல் இருவரின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, இருவீட்டாரும் இவர்களை கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பனியன் நிறுவனத்திற்குள் சென்ற பிரேமும், நிரோஷாவும் இரவு வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தபோது, கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Banyan , Banyan company owner commits suicide with fake girlfriend
× RELATED ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு