சென்னை: சென்னை சேப்பாக்கம் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் கால்டாக்சி ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சாலை LIC அருகே கார்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் இருந்து பெறும் கமிஷன் தொகையை குறைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கால்டாக்சி கட்டணங்களை அரசே நிர்ணயிக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.