×

சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் உற்பத்தியை அதிகரிக்க OPEC முடிவு

ஈரான்: சர்வதேச நாடுகளில் இருக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்க சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் அளவீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத இடையே கூடுதலாக 20 லட்சம் பேரல் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக ஒபெக் அறிவித்துள்ளது.

நேற்று காணொலி வாயிலாக நடைபெற்ற ஒபெக் ஆலோசனை கூட்டத்தில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தங்களது மாதாந்திர உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு செய்தன. பொதுவாக கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும். ஆனால் தற்போது அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவு வரும் காரணத்தால் விலை உயர்வு தொடர்கிறது. இதனிடையே ஈரான் மீதான வர்த்தக தடைகளை விரைவில் நீக்க அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிடம் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே இதற்காக பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் எதிரொலியாக பேச்சுவார்த்தைக்கு கால தாமதம் ஆகி வருகிறது. ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச வர்த்தக சந்தைக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமெரிக்க சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வரும் நிலையில் ஈரான் மீதான வர்த்தக தடை விரைவில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : OPEC , crude oil
× RELATED ரஷ்யாவுக்கு எதிரான நோட்டோவின்...