சென்னை: மின் கணக்கீடு செய்ய டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர் முறை கொண்டுவரப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரிசெய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும். கடந்த ஆட்சியில் 9 மாதம் செய்யாமல் இருந்த பராமரிப்பு பணி தற்போது 10 நாளில் முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டிருக்கிறார்.