சென்னை: பாளையங்கோட்டை சிறையில் நடந்த மோதலில் இறந்த கைதி முத்து மனோ உடலை பெற பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உரிய இழப்பீடு, விசாரணை கோரி 74 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் உடலை பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடலை பெற சம்மதம் தெரிவித்துள்ளனர்.