திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பள்ளிபாளையத்தில் கல்குவாரியில் உள்ள குட்டை நீரில் மூழ்கி சங்கவி (11), சாந்தனு (8) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாந்தனுவின் உடலை தீயணைப்பு படையினர் மீட்ட பின் சங்கவியின் உடலை தேடி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஆலங்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் 5 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.