×

ரூ.300 கோடியில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம்!: அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு..!!

டெல்லி: ரூ.300 கோடியில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த பின் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட நிதி ஒதுக்குவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. நிலுவையை வழங்குதல், வீடுகட்டும் திட்டத்தில் நிதி உள்ளிட்டவை பற்றியும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


Tags : Puducherry Legislative Assembly ,Minister ,Namachchivayam , Rs 300 crore, Puducherry Legislative Assembly, new building, Prime Minister, Minister Namachchivayam
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...