×

தேனியில் மனைவியை கொலை செய்துவிட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர் கைது..!!

தேனி: தேனியில் மனைவியை கொலை செய்துவிட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். தேனியை சேர்ந்த ராணுவ வீரர் ஈஸ்வரனுக்கு (25) உசிலம்பட்டி கிரிஜா பாண்டிக்கும் (23) 2018ல் திருமணமானது. ஈஸ்வரன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் உசிலம்பட்டி போலீசில் கிரிஜா புகார் தெரிவித்தார். இதையடுத்து, கணவர் - மனைவி இடையே சமரசம் செய்து வைத்த பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து, ஈஸ்வரனின் தந்தை, கிரிஜாவின் தந்தை செல்வதை அழைத்து மகன் கொடுமைப்படுத்துவதாக தகவல் அளித்தார். செல்வம் தனது மகள் கிரிஜாவை தேடி சென்ற போது வீடு காலி செய்யப்பட்டிருந்தால் போலீசாரிடம் புகார் அளித்தார். ராணுவ வீரர் ஈஸ்வரனை தனிப்படை போலீஸ் தேடியபோது திருவாரூரில் தலைமறைவாக இருந்துள்ளார். கைதான ஈஸ்வரன், விசாரணையில் 2019 டிசம்பர் 25ல் மனைவி கிரிஜா பாண்டியனை அடித்து கொலை செய்தது அம்பலமானது. கொலை செய்தபின் தனது மனைவியின் உடலை அரண்மனைப்புதூர் முல்லை பெரியாற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஈஸ்வரனை கைது செய்த போலீஸ், தீயணைப்பு படை உதவியுடன் கிரிஜா பாண்டியன் உடலை தேடி வருகின்றனர்.

Tags : Theni , Theni, wife murdered, soldier arrested
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு