சென்னை: மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.