டெல்லி: தடுப்பூசி குறித்த புள்ளி விவரங்களை அறியாமல் மலிவு அரசியல் செய்யாதீர்கள் என்று ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ வர்தன் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகள் இருப்பு குறித்து புள்ளி விவரங்கள் தெரியாமல் பல தலைவர்கள் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாதந்தோறும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து 15 நாள்களுக்கு முன்பே தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து தவறான கருத்துக்களை தெரிவிப்பதை தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.