×

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

Tags : Supreme Court ,Uppur, Ramanathapuram , Ramanathapuram, Uppur Thermal Power Station, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...