தூத்துக்குடி: அதிமுக அரசு ஒப்புதல் தந்த திரைப்பட தொழிலாளருக்கு 5,000 வீடுகள் கட்டும் திட்டத்தை கைவிடக்கூடாது என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்களப் பணியாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் சர்ச்சை பற்றி மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.