×

கடலூர் அருகே நேற்று மோதலில் ஈடுபட்ட 2 ரவுடி கும்பலை சேர்ந்த 11 பேர் கைது!: போலீசார் நடவடிக்கை

கடலூர்: கடலூர் அருகே நேற்று மோதலில் ஈடுபட்ட 2 ரவுடி கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த தாடி அய்யனார் கும்பலுக்கும் தேவா கும்பலுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. புதுச்சேரி - கடலூர் எல்லையில் அய்யனார் மற்றும் அவரது கூட்டாளி வேல்முருகனை தேவா கும்பல் அரிவாளால் வெட்டியது. பதிலடியாக அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதில் தேவாவின் கை துண்டானது.


Tags : Cuddalore , Cuddalore, clash, 11 rowdies arrested
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...