×

இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என தமிழக அரசு கூறியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால் இப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் 1-ம் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் வழங்கும் பணி தொடங்க உள்ளது. மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் வருகிற 31-ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒருவர் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகம் இருந்த சூழலால் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது. 


தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையிலும், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை, விலையில்லா மளிகை பொருட்கள் வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியதையடுத்தும் மீண்டும் கைரேகை பதிவு முறை தொடங்கப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Tags : TN Government , New Family Card, Approval, New Family Card, Printing, Government of Tamil Nadu
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது