×

ஐஏஎஸ் அதிகாரிகள் ஷில்பா, ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் ஷில்பா மற்றும் ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரியாக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் தனி பிரிவின் சிறப்பு அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும் குறைதீர்ப்பு பிரிவு மின் ஆளுமை பிரிவுகளின் சிறப்பு அதிகாரியாக மறுஉத்தரவு வரும் வரை நீடிப்பார். அதேபோன்று,  செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அலுவல் சாரா துணை செயலாளருமான பி.வி.ஜெயசீலன் கூடுதலாக தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IAS ,Shilpa ,Jayaseelan , IAS officers Shilpa and Jayaseelan have additional responsibility
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...