×

ஓ... பலாத்காரம் செய்துட்டானா செருப்பால 5 அடி கொடு கையில ரூ.50,000 வாங்கிக்க: உபி.யில் கட்டப்பஞ்சாயத்து

லக்னோ:  உத்தரப் பிரதேச மாநிலம், மகராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி வயலுக்கு காய்கறிகளை பறிப்பதற்காக தனியாக சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சிறுமி புகார் செய்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரின் வீட்டிற்கு சிறுமியின் குடும்பத்தினர் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், குற்றச்சாட்டை அந்த இளைஞரின் குடும்பத்தினர் மறுத்து விட்டதோடு, சிறுமியையும், பெற்றோரையும் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இரு குடும்பத்தாரையும் அழைத்து பேசிய ஊர் ‘பெரிய மனிதர்கள்’, ‘இதோ பாருமா... நடந்தது நடந்து போச்சு.. இளவட்ட பையன் தெரியாம பண்ணிட்டான்... வேணும்னா, அவனோட கன்னத்துல 5 முறை செருப்பால அடி. அப்புறம், கையில ரூ.50 ஆயிரம் வாங்கித் தரோம். வாங்கிக்கங்க... பிரச்னை தீர்ந்துடும்...’ என்று தீர்ப்பு அளித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கடந்த 25ம் தேதி கோத்திபார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், இளைஞரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Kattapanchayattu ,UP , Oh ... did you rape me? Give me 5 feet of sandals to buy for Rs.
× RELATED குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்