×

முதலமைச்சரின் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

சென்னை: முதலமைச்சரின் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற குறைதீர்ப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் பணியாற்றி வருகிறார். மின்னணு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் ஷில்பா பிரபாகர் செயல்படுவார் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமை பிரிவும் கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Shilpa Prabhakar Satish ,Special Officer of the Chief Minister's Private Service , shilpa pirabahar sathish
× RELATED முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக...