×

பாப்பாநாடு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

தஞ்சை: பாப்பாநாடு காவல் நிலைய எஸ்ஐ ஜெய்ஸ்கரன் மாரடைப்பால் மரணமடைந்தார். .போலீஸ் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தஞ்சை ஞானம் நகர் 5 வது தெருவில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்கரன்(55). இவர் பாப்பாநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெய்ஸ்கரன் பணியை முடித்துவிட்டு தஞ்சையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் . வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மயக்கத்தில் இருந்த ஜெயஸ்கரன் உடலை பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் ஜெய்ஸ்கரன் மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட அவரது மனைவி மற்றும் மகள்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில், பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசார் தஞ்சைக்கு விரைந்து சென்றனர் .மேலும் இது தொடர்பாக தஞ்சை எஸ்பி, டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஎஸ்பி சுனில் தகவல் தெரிவித்தார் பணியிலிருந்து மரணமடைந்ததால் உரிய போலீஸ் மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் தஞ்சையில் உள்ள ஞானம் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பகல் முழுவதும் தங்களோடு பணியாற்றிக்கொண்டிருந்த எஸ்ஐ திடீரென மரணம் அடைந்ததால் பாப்பாநாடு, ஒரத்தநாடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் சக காவலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Papanadu SI dies of heart attack: Burial with police honors
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...