சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்தைறையினர் சோதனையிட்டனர். அப்போது கடலூரை சோ்ந்த பஷலூதீன் (26) என்ற பயணி மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சோதனையில் அவருடைய உள்ளாடைக்குள் 3 பிளாஸ்டிக் குப்பிகளை மறைத்து வைத்திருந்தார். அதில் தங்கபேஸ்ட்கள் இருந்தது. அதன் எடை 648 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.31.5 லட்சம். கைது செய்தனர்.