×

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேட்டு புகார் விசாரணை நிறைவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேட்டு புகார் விசாரணை நிறைவடைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பா மீது 280 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு ஊழல் மற்றும் முறைகேட்டு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக விசாரணை குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. விசாரணையை தொடர்ந்து இறுதிக்கட்ட அறிக்கையை தயார் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க நேரம் கேட்டிருப்பதாக விசாரணைக்குழு தலைவர் கலையரசன் தெரிவித்திருக்கிறார்.

விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு அதன் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை விவரத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Anna ,Suruba , anna univ, soorappa
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...