டெல்லி: இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மாடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. மாடர்னா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என தகவல் அளித்துள்ளது.