×

லண்டன் ரயில் நிலையம் அருகே நுழைவு வளைவுகளில் தீ விபத்து : 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் எரிந்து நாசம்!!

லண்டன் : தெற்கு லண்டன் ரயில் நிலையம் அருகே நுழைவு வளைவுகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்கு  பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ரயில்வே வளைவுகளுக்கு கீழ் இருந்த 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் மற்றும் தொலைபேசி பெட்டிமுற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த 15 தீயணைப்பு வண்டிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க போராடினர்.சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் அதிகம் பகிரப்பட்டன.ரயில் நிலையம் முழுவதும் கரும்புகை பரவி வருவதால் அருகே இருக்கும் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் சென்ற பயணிகளும் ஓட்டம் பிடித்தனர்.தீ பற்றியது காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு  தீ கட்டுக்குள் வந்ததாக தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : London train station , லண்டன் ரயில் நிலையம்
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்