×

2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : 2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தப் புதிய சட்டத்திலிருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015யை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்றும், அதேப்போல் ஏற்கனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது என கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு, நில ஊர்ஜித 2019 என்ற புதிய சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் கடந்த முறை விசாரிக்கப்பட்ட போது, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஊர்ஜித 2019 என்ற புதிய சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அனைத்து வாதங்களையும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில் தமிழக அரசு 2019ல் கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் திருவள்ளூரை சேர்ந்த 55 விவசாயிகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



Tags : Supreme Court ,Government of Tamil Nadu , உச்சநீதிமன்றம்
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...