டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம். மேலும் தொழில்துறையினருக்கு அவசர கால் கடனுதவியாக ரூ.1.5 லட்சம் கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.