தருமபுரி: பட்டா வழங்க லஞ்சம் பெற்ற பாலக்கோடு ஜர்த்தலாவ் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) கைது செய்யப்பட்டுள்ளார். மூர்த்தி என்பவர் பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது வி.ஏ.ஓ. செல்வம் ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.2,000 கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.