×

பரமக்குடி அருகே 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதிகளில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில், ரேசன் அரிசி கடத்துவதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் நயினார்கோவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,50 கிலோ எடையுள்ள 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரசி இருந்தது. இதுகுறித்து விசாரணை செய்த போது, நயினார்கோவில் பகுதியில் இருந்து மதுரைக்கு அரசி கடத்த முயன்றது தெரியவந்தது.உடனே நயினார்கோவில் போலீசார், ரேசன் அரிசி கடத்திய மதுரையை சேர்ந்த மணிகண்டன் (29), முத்து இருளாண்டி(41), சரவணன்(39), நாகூர் கனி(61) ஆகிய நான்கு பேரை கைது செய்து, வாகனம் மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Paramakudi , Paramakudi: 3,000 kg of racun rice was seized in Nainarko area near Paramakudi.
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு