×

உபி.யி்ல் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ‘உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்,’ என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.  உத்தரப் பிரதேசம் உட்பட 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் ஒவைசி கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலை சந்திக்க போவதாக ஒரு தொலைக்காட்சியில் நேற்று செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து, டிவிட்டரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவைசி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக வெளியான தகவல் தவறு. உத்தரக்காண்ட், உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும்,’ என்று கூறியுள்ளார்.


Tags : UP ,Mayawati , UP., Solo competition, Mayawati
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...