×

குறையும் தொற்று..அதிகரிக்கும் ஆர்வம்!: ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!!

ஈரோடு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சுயற்சி  முறையில், தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் தினமும் 20 மையங்களிலும் மாவட்டம் முழுவதும் 107 மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். 


தற்போது டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முகாம்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதுடன் வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முகாமிற்கு வருகின்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


கொரோனாவை ஒழுத்துக்கட்ட தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு அறிவுறுத்திய போதும் தொடக்கத்தில் தடுப்பூசி மீது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், தடுப்பூசியின் மதிப்பு அறிந்து பலரும் முன்வந்து வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வது குறிப்பிடத்தக்கது. 



Tags : Erotle , Erode, corona vaccine, people
× RELATED ஈரோட்டில் நாட்டுக்கோழி மோசடி...