சென்னை: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி போராட்டங்களில் ஈடுபட்ட பாமக-வை சேர்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாமக வன்னியர் சங்க போராட்டத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு நடவடிக்கை கோரி வராகி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வராகி என்பவர் தொடர்ந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிஜிபி சார்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.