சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சமூகநீதி காவலர்’ வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: இந்திய சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் அந்த வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த ‘சமூகநீதி காவலர்’ வி.பி.சிங் பிறந்தநாள் இன்று. சமூகநீதி அரசியலில் புதுவெளிச்சம் பாய்ச்சிய அவரை நினைவுகூர்ந்து இடஒதுக்கீடு எங்கள் உரிமை என முழங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.