×

எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.1 கோடி கொள்ளை விவகாரம் வட மாநில கொள்ளையனை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் திருடிய வழக்கில்  கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க  பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் ₹1  கோடிக்கு மேல் மோசடி செய்த அமீர் அர்ஷ் (37) போலீசாரால் அரியானாவில் கைது செய்யப்பட்டான். அவன் அளித்த தகவலின்படி  மேலும் 2 குற்றவாளிகளை தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமீர் அர்ஷ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, பூந்தமல்லி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட  வடமாநில கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த  ராயிலாநகர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று பூந்தமல்லி  நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த  நீதிமன்றம், கொள்ளையனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த  அனுமதி அளித்து உத்தரவிட்டது.



Tags : SBI ATM ,Poonamallee , SBI, ATM, robbery, Northern State robber,, court
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...