சென்னை: சென்னை-பாரிஸ் இடையே நேரடி விமான சேவையை ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், பாரிஸ்- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இன்று (சனிக்கிழமை) காலை 10.25 மணிக்கு பாரிசிலிருந்து புறப்படும் ஏர்பிரான்ஸ் விமானம் இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது. திங்கள் அதிகாலை 1.20 மணிக்கு சென்னையிலிருந்து பாரிஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஒன்றிய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சைக்காக கார்ப்பிரேட் நிறுவன பணியாளர்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
இதனால் வாரத்திற்கு ஒரு விமான சேவையை மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. ஜூலை 8ம் தேதியிலிருந்து வியாழன் சென்னை வந்துவிட்டு, சனிக்கிழமை மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது. விமான சேவைக்கான தடை நீங்கிய பின்பு வாரத்தில் 3 விமான சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரான்சிலிருந்து சென்னைக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களும், சென்னையிலிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விமான சேவைகளை நடத்த உள்ளது. இதில் 279 சீட்கள் உள்ளன. பயண நேரம் 10 மணி 25 நிமிடங்கள்.