×

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

சென்னை : சென்னை தி.நகரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துறையாடலில் ஈடுபட்டு வருகிறார். இக்கூட்டத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்......

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததாவது...வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது .. தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமிக்கும் பணியும் விரைவில் நடைபெறும்...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் தமிழக அரசின் சார்பில் மேல்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்...ஜிஎஸ்டி க்கு முன்பு வாட் வரி அமலில் இருந்த காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ள நிலையில்  அந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.போலி பில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது ...பொருட்களை விற்பனை செய்யாமல் பில் மட்டும் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.


Tags : Commerce Department ,Minister ,Moorthy Warning , அமைச்சர் மூர்த்தி
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...