×

தேசத்துரோக வழக்கில் பிரபல நடிகை ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் ஆணை..!!

திருவனந்தபுரம்: தேசத்துரோக வழக்கில் பிரபல நடிகை ஆயிஷா சுல்தானுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. லட்சத்தீவு நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட்டேல் அண்மையில் கொண்டு வந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில் கொரோனாவை பரப்பும் உயிரி ஆயுதமாக பிரபுல் கோடா பட்டேலை ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக விமர்சித்தார். 


இதுகுறித்து பாஜக பிரமுகர் அளித்த புகாரில் லட்சத்தீவு போலீசார் நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி நடிகை ஆயிஷாவுக்கு ஒருவார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது. இதையடுத்து லட்சத்தீவில் உள்ள கவரத்தி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடிகை ஆயிஷாவிடம் 2வது முறையாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆயிஷா சுல்தானா தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிபதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். போலீஸ் விசாரணைக்கு ஆயிஷா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 



Tags : Kerala High Court ,Ayesha , Treason case, Ayesha, Kerala High Court, pre-bail
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்