×

நாகையில், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால் வங்கி மேலாளர் பலியான விவகாரம் :மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் பலியான விவகாரம் தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்குனர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ராஜேஷ், கொரோனா தொற்று பாதித்து, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி, ராஜேஷ், திடீரென உயிரிழந்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால் தனது கணவர் மரணமடைந்து விட்டதாகவும், ராஜேஷின் மனைவி சுபா குற்றம் சாட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Nagle ,State Human Rights Commission Notaries , ஆக்சிஜன் சப்ளை
× RELATED நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம்...