×

திறந்தவெளி களங்களிலுள்ள நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

சென்னை: திறந்தவெளி களங்களிலுள்ள நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மத்திய, மாநில அரசு கிடங்குகள், காலி அரசு கட்டடங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் திறந்தவெளியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மழையில் நனையாமல் நெல் மூட்டைகளை பாதுகாக்காவிடில் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


Tags : O. Panneer ,Selvam , Protect paddy bundles in open fields from getting wet in rain: O. Panneer Selvam Talk
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்...