சென்னை: 2டிஜி குளுக்கோஸ் மருந்து தயாரிக்க 40 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழிநுட்ப ஆலோசனை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஐ.சி.எம்.ஆர். ஆய்வு செய்து வருவதாகவும் ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.