×

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்படாமலேயே எப்படி கணக்கிடப்படும் என்பது கூறப்பட்டிருந்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை எது அறிவிக்கப்பட்டதோ அதனை ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

தேர்வு நடத்தப்படாமலேயே அவர்களை அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற வைப்பது, எந்த முறையை கணக்கிடுவது, ஒவ்வொரு பாடத்திட்ட முறையும் ஒவ்வொரு விதமாக இருந்தது. இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் கணக்கிடுவது என்பது குறித்து ஒரு முறையை அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல மனுக்கள் உச்சநீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கூறப்பட்ட பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் பல்வேறு ஆலோசனைக்கு பின்பே ரத்து செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 10, 11, 12 என மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது.

அந்த முறையை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி கந்தல்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டன. 10, 11, 12ஆம் வகுப்பின் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்ணை அறிவிப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என வாதிடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் கூடுதல் மையங்களில் தனிமனித இடைவெளியுடன் பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : Supreme Court , cbse
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...