சென்னை: உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாத கோடை விடுமுறையில் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கால் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் நீதிமன்றம் வருவது சிரமமாக இருப்பதால், மின்னஞ்சல் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்யலாம். நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், உயர் நீதிமன்ற தெற்கு நுழைவாயிலில் மட்டுமே ஆவணங்கள் பெறப்படும். அவ்வாறு நேரடியாக தாக்கல் செய்ய இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்யலாம். வழக்கின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட பதிவுத் துறைக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் மின்னஞ்சலில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post கோடை விடுமுறை கால நீதிமன்றங்களில் இ-மெயிலில் ஆவணங்களை தாக்கல் செய்யலாம்: உயர் நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.