×

வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!: ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு..!!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் சிக்கிக்கொண்ட பிறகு சமூக வலைத்தளத்தில் பல்வேறு ஆசிரியர்கள் மீது பல பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள். 


அந்த வகையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஜுடோ பயிற்சியாளராக பணியாற்றிய கெபிராஜ் என்பவர் மீதும் பாலியல் புகார் எழுந்தது. அந்த அடிப்படையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கெபிராஜிடம் விசாரணை செய்ததில் உண்மை தெரியவந்தது. அதன்படி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் பயிற்சிக்கு வந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதுவும் வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.  


சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கெபிராஜை மூன்று நாள் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கெபிராஜ் மீது யாரேனும் புகார் அளிக்க விரும்பினால் அது தொடர்பாக  சி.பி.சி.ஐ.டி.யின் அதிகாரபூர்வ மெயில் ஐ.டி. மற்றும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்த பெண் பயிற்சி வீராங்கனை ஒருவர் புகார் அளித்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கெபிராஜ் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அவர் மீது தற்போது மேலும் ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.



Tags : CBCID ,Kibraj , Sexual Complaint, Judo Coach Kepraj, CPCIT, Case
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...