டெல்லி: தொடர்ந்து 2-வது ஆண்டாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமர்நாத் கோயில் வாரிய உறுப்பினர்களுடன் விரிவாக விவாதித்த பிறகே இந்த ஆண்டும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை ரத்து செய்யப்படுகிறது.