×

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அரசு அதிகாரி திடீர் சாவு

திருவொற்றியூர்:  கொளத்தூரை சேர்ந்தவர் கபாலி (61). ஆவடி நகராட்சியில் வருவாய் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கபாலிக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு  திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கபாலி மட்டும் சிகிச்சை முடிந்து கடந்த 3 நாட்களுக்கு முன் வீடு திரும்பி, எண்ணூர் காமராஜர் சாலையில் உள்ள சகோதரர் வீட்டில்  ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்று கபாலிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புழல் லட்சுமிபுரத்தை சேர்ந்த சேகருக்கு (55), கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். இவர், நேற்று காலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்….

The post கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அரசு அதிகாரி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kapali ,Kolathur ,Avadi Municipality ,Kabali ,Dinakaran ,
× RELATED கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் புதிய...