×

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: சோப்பூர் அருகே குண்ட்பிரத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முக்கிய தீவிரவாதிகளான முதாசிர், பாகிஸ்தானை சேர்ந்த அப்துல்லா உள்பட 3 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட் பிராத் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நள்ளிரவு முதல் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதியான முதாசிர் பண்டிட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

சமீபத்தில் 3 போலீசார், 2 கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேரை படுகொலை செய்ததில் பண்டிட்டுக்கு தொடர்புள்ளது. இந்த சண்டையில் மொத்தம் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர் என காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறியுள்ளார். வடகாஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்ரார் என்ற அப்துல்லா என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு தீவிரவாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரமுடன் செயல்பட்டு வருகிறான் என்றும் அவர் கூறியுள்ளார்.



Tags : Lashkar ,e-Taiba ,Kashmir , terrorist
× RELATED லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக அறிவிப்பு